Category Archives: திருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த  லீலைகள்

திருச்சி சதாசிவத்திற்கு, அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் செய்த லீலைகள்

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2002. திருச்சி சதாசிவத்திற்கு,

அவதார் ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள்

செய்த  லீலைகள்.

2002 –ல் நியூ டெல்லி, Vikaspuri –ல் தங்கியிருந்தேன். ஒரு நாள் இரவு 9 மணிக்கு, சதாசிவம் திருச்சியில் இருந்து போன் செய்தார். “நான் heart check up செய்ய clinic சென்றேன். result: artery-ல்  ஒரு blockade இருப்பதாக டாக்டர்  சொல்கிறார். Chennai Apollo hospital –க்கு ref.letter தந்துள்ளார். “

சேஷனிடம் முறையிட்ட உடன்,எனக்கு சேஷனிடம் இருந்து  பதில் கிடைத்தது.
அப்படி ஒன்றும் இல்லை. டாக்டர் report, ஏதோ  காரணத்தால் தவறாகி விட்டது. Blockade இல்லை என சேஷ பெருமான் உறுதியுடன் சொன்னார்கள். இதை சதாசிவத்திடம் சொன்னால் ஒத்துக்கொள்ள மாட்டான். பேசாமல் விட்டு விடு. அவன் Apollo hospital சென்று வரட்டும். பிறகு டாக்டர் சொன்னார் என்று நான் சொன்னதையே திருப்பி  சொல்வான்“.

இரண்டு நாள் கழித்து, மீண்டும் சதாசிவத்திடம் இருந்து phone அழைப்பு. “நான் இன்று chennai  Apollo Hospital சென்று check செய்தேன் .டாக்டர் check செய்து விட்டு , – உனக்கு artery –ல் எந்த blockade –ம் இல்லை. எந்த டாக்டர் அப்படி சொன்னார்?என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

நான் அவரிடம், “சேஷாத்ரி பெருமான், இரண்டு நாட்களுக்கு முன், நீங்கள் phone-ல் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போதே, Apollo டாக்டர் உங்களிடம் இன்று  சொன்னதை சொல்லிவிட்டார்கள்“, என்றேன். மகான் சொன்னதை அப்படியே அவரிடம் சொன்னேன்.

நன்றி.குருஜி.

திருவண்ணாமலை.

22 .06 .2010.

ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே.