Blog Archives

வந்தீப் ஷெட்டி வாழ்க்கையை மாற்றியமைத்த அவதார் ஸ்ரீ சேஷா

ஓம் ஸத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே

2003 /2006: மும்பை வந்தீப் ஷெட்டி(கன்னடக்காரர்– Vandip Shetty) வாழ்க்கையை மாற்றியமைத்த

அவதார சேஷாத்ரி ஸ்வாமிகள் (incarnation of Shiva)


ஸ்ரீ. வந்தீப் ஷெட்டி என்னை சந்திக்கும் போது (2003 ) 21 வயது இளைஞர்.B.Com. கெட்ட நண்பர்கள் சகவாசம். வேலை இல்லாமல் அலைந்து கொண்டிருந்தார். அவர் தகப்பனாருக்கு Ghatkopar (W) ரயில்வே ஸ்டேஷன் வெளியே Paan beda shop வியாபாரம். பெற்றோர் இருவரும் மன வருத்தத்துடன் முறையிட்டார்கள்.

அப்போது ஜூன் 2003. மும்பையில் மழை சீசன் தொடங்கிவிட்டது.

அவர்களுக்கு குல குரு உண்டு. வந்தீப் பெற்றோர்களுடன் வந்து ஆசிர்வாதம் கேட்டார். அவருக்கும் பெற்றோர்களுக்கும் spariksha தீக்ஷை, ஆக்ஞா சக்கரம் (the 6th Chakra in Kundalini Yoga-to activate the soul- guru’s Brahma Sakthi initiated. it is an imaginary chakra situated in between two eye brows) வாயிலாக கொடுக்கப்பட்டது. பிறகு ‘சேஷ மந்த்ரம்’, ஓம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கேமந்திர உபதேசம் கொடுக்கப்பட்டது. அனு தினமும் 1000 முறை ஒது மாறு  அறிவுரை செய்யப்பட்டது. எந்த மறுப்பும் சொல்லாமல் ஏற்றுக்கொண்டனர்.

2003 மழைக்காலம் முடித்தவுடன், வேலை தேட சொல்லி வாக்கு சொல்லப்பட்டது.

இந்த Brahma சக்தி குருவின் தபஸ் சக்தியிலிருந்து, சிஷ்யனின் தேவைக்கு ஏற்றவாறு வழங்கப்படும். அது ஆத்மாவை தூண்டி விடும். பிறகு,சேஷ மந்திரம் ஓதும் போது, ஆத்மா பலம் பெறும். ஆத்மா தன் சார்பாக, மனதுடன் மன சாட்சியாக பேசும். “நீ செய்வது சரியல்ல. உன்னை திருத்திக்கொள் என்று பேசும்வந்தீப் சேஷ மந்த்ரம் ஓத ஓத அவர் ஆத்மாவும் அவர் மனதுடன் பேசி அவரை திருத்தியது. நண்பர்களின் சகவாசத்தை கைவிட்டார். 2003 october –ல் வேலைக்கு முயற்சி செய்தார்.

J.N.P.T. (JAWAHARLAL NEHRU PORT TRUST-MUMBAI) –ல் CONTAINER TERMINAL –ல் C & F (CLEARING AND FORWARDING) AGENT-ஆபீஸ்ல் வேலை. மாத  சம்பளம் Rs. 8000 . 10 மணி நேர வேலை. படிப்படியாக அவர் திறமையும், சேஷ மந்திர ஜெபமும், அவரை  மேல் நிலைக்கு உயர்த்தியது. அதாவது 2005 ஜனவரியில் அவர் மாத சம்பளம் Rs. 18000/ ஆக  உயர்ந்தது. வேலை நேரமும் கூடியது. 16 மணி நேர வேலை. உழைத்தார். கடுமையான உழைப்பு.

ஏற்கனவே குடியிருந்த 300 sq .ft flat ஐ விற்று விட்டு வேறு 650 sq.ft flat வாங்கலாமா என வாக்கு கேட்டார். சேஷ நாதனின் சம்மதம் கிடைத்தது. ஒரே மாதத்தில் 2005 பெப்ருவரியில் புது flat கிடைத்தது. புது flat கிடைத்ததும், வந்தீப் பெற்றோர்களுக்கு ஒரு வாக்கு சொல்லப்பட்டது. “வந்தீப் திருமணத்திற்கு பெண் பார்க்க உத்தரவு வந்தது, சேஷன் மூலமாக. 2006 ஜனவரி 22 ஆம்  தேதி திருமணம் நடந்தது. மணப்பெண் ஸ்ரீ வித்யா Vikroli Accenture –ல் (Rs .20000 / ல்) வேலையில் இருந்தார்.

நன்றி. வணக்கம்.

குருஜி. திருவண்ணாமலை.   05.06.2010.